இந்தியாவில் ரூ.2000 கோடி முதலீடு செய்யும் அமேசான் - போட்டி நிறுவனங்களுக்கு புதிய சவால்
அமேசான் (Amazon) இந்தியாவின் ஈ-காமர்ஸ் துறையை மேம்படுத்தும் நோக்கில் 2025-ஆம் ஆண்டு ரூ.2000 கோடி மேற்பட்ட அளவில் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய முதலீடு, இந்தியாவின் வேகமாக வளர்கின்ற ஓன்லைன் சந்தை, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கங்களை மையமாகக் கொண்டது.

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு
இந்த முதலீடு அமேசானின் பரிவர்த்தனை, தொகுப்பு மற்றும் விநியோக மையங்களை புதுப்பிக்கும் மற்றும் புதிய மையங்களை தொடங்கும் நோக்கில் செலவிடப்படும்.
இதனால் இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு வேகமான மற்றும் நம்பகமான சேவை கிடைக்கும் என அமேசான் தெரிவித்துள்ளது.
இதோடு, Flipkart, Meesho போன்ற போட்டி நிறுவனங்களுக்கு இது சவாலாக மாறும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் ஈ-காமர்ஸ் சந்தை 2030-ல் 325 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு வளரக்கூடியதாக கணிக்கப்படுகிறது. இந்த வளர்ச்சியை கணக்கில் கொண்டு தான் அமேசான் தொடர்ந்து இந்தியாவில் பெரும் முதலீடுகளை செய்கிறது.
மேலும், இந்த கட்டடங்கள் சுற்றுச்சூழல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இடையூறில்லாத வடிவமைப்பில் உருவாக்கப்படும் என்றும், பணியாளர்களின் நலன்களையும், பாதுகாப்பையும் உயர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
இந்தத் திட்டம், இந்தியாவின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சாதாரண மக்களுக்கு வேலை வாய்ப்பு என பல்வேறு நிலைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Amazon India investment 2025, Amazon Rs 2000 crore expansion, India e-commerce growth, Flipkart vs Amazon India, Amazon new fulfillment centers, Amazon warehouse upgrade India, Amazon employment boost India, Amazon digital India strategy, Foreign investment in Indian economy, Amazon Rs 2000 crore India investment