பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு
பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, இந்தியா புதிய பினாகா ரொக்கெட் அமைப்பை தயாரிக்கவுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் மிக முக்கிய முன்னேற்றமாக, பினாகா (Pinaka) ரொக்கெட் ஏவுகணை அமைப்பின் புதிய வேரியன்ட் விரைவில் தயாரிக்கப்பட உள்ளது.
இது 120 கிமீ மற்றும் 300 கிமீ வரை தாக்கும் திறன் கொண்டது என்று DRDO தலைவர் சமீர் வி. கமத் அறிவித்துள்ளார்.
இந்த புதிய பினாகா MBRL (Multi Barrel Rocket Launcher) அமைப்பு, மிக குறுகிய நேரத்தில் அதிக இலக்குகளை அழிக்கக்கூடியது.
44 விநாடிகளில் 12 ரொக்கெட்டுகள் ஏவக்கூடிய அதிநவீன அமைப்பு இது. இது பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு கடும் எச்சரிக்கையாக மாறியுள்ளது.
பினாகா அமைப்பின் மூலம், இந்திய இராணுவம் குறுகிய நேரத்தில் அதிகமான இலக்குகளை, அதி துல்லியத்துடன் தாக்க முடியும். இது உயிர் காக்கும் துரித தாக்குதல் திறனை வழங்கும்.
இது மட்டுமல்லாமல், கடந்த மாதம், DRDO மற்றும் நிபே லிமிடெட் (NIBE Ltd) நிறுவனத்துடன் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் (LAToT) கையெழுத்தானது.
இதில், பினாகா மற்றும் Battery Command Post ஆகியவற்றின் உற்பத்தி இந்திய தனியார் துறையில் விரிவாக மேற்கொள்ளப்படும்.
இந்த ஒப்பந்தம், ‘Make In India’ மற்றும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ இலக்குகளை வலுப்படுத்தும் வகையில், இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் உள்நாட்டுச் சாதனங்களை உருவாக்கும் முயற்சிக்கு திருப்புமுனையாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |