அம்பானி-அதானி அதிரடி கூட்டணி - எரிபொருள் விற்பனையில் புதிய ஒப்பந்தம்
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி, எரிபொருள் விற்பனை துறையில் அதிரடி கூட்டணியை அறிவித்துள்ளனர்.
இருவரும் இணைந்து இந்தியா முழுவதும் உள்ள தங்கள் எரிபொருள் நிலையங்களை ஒருங்கிணைத்து புதிய வர்த்தக மாதிரியை உருவாக்க உள்ளனர்.
அதானி டோட்டல் கேஸ் (ATGL) மற்றும் Jio-bp ஆகிய இரு நிறுவனமும் இணைந்து, எரிபொருள் தரத்தை மேம்படுத்துவதும், நுகர்வோருக்கு சிறந்த சேவையை வழங்குவதும் நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதன்படி, ATGL-ன் சில நவீன எரிபொருள் நிலையங்களில் ஜியோ-பிபி நிறுவனத்தின் உயர் தர பெட்ரோல் மற்றும் டீசல் விற்கப்படும். அதேபோல், ஜியோ-பிபியின் எரிபொருள் நிலையங்களில் ATGL-ன் CNG விநியோக சாதனங்கள் நிறுவப்படும்.
ATGL நிறுவனம் 650-க்கும் மேற்பட்ட CNG நிலையங்களை வைத்திருப்பதுடன், ஜியோ-பிபி நிறுவனத்துக்குத் 2,000-க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்கள் உள்ளன.
இது இரு நிறுவனங்களுக்கும் இடையிலான இரண்டாவது ஒத்துழைப்பாகும். கடந்த வருடம் ரிலையன்ஸ் நிறுவனம், அதானி பவர் நிறுவனத்தின் மத்தியப் பிரதேச திட்டத்தில் 26% பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
ஜியோ-பிபி தலைவர் சர்தக் பெஹூரியா, “நாங்கள் நுகர்வோருக்கு சிறந்த தரமான எரிபொருட்களை வழங்க ஒரே நோக்குடன் செயல்படுகிறோம்,” என தெரிவித்துள்ளார்.
ATGL தலைமை இயக்குநர் சுரேஷ் மங்களானி, “இந்த கூட்டணி எங்கள் வளங்களை பரஸ்பரமாகப் பயன்படுத்தி, நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்தும்,” என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ambani Adani fuel partnership, Jio-bp Adani Total Gas deal, Reliance Adani fuel stations, Indian fuel retail expansion, CNG petrol diesel retail India, Mukesh Ambani Gautam Adani tie-up, Energy collaboration India 2025, Jio-bp network growth, ATGL fuel station integration, India private oil sector news