ஜேர்மன் ஆயுத நிறுவனத்துடன் அனில் அம்பானி நிறுவனத்தின் புதிய ரூ.600 கோடி ஒப்பந்தம்
ஜேர்மன் ஆயுத உற்பத்தி நிறுவனத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக ரூ.600 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
அனில் அம்பானி தலைமையிலான Reliance Infrastructure நிறுவனம், ஜேர்மனியின் முன்னணி பாதுகாப்பு உற்பத்தியாளரான Rheinmetall Waffe Munition நிறுவனத்துடன் ரூ.600 கோடி மதிப்பிலான உயர்தர ஆயுத உற்பத்தி ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது.
இந்த ஒப்பந்தம், Reliance Defence நிறுவனத்திற்கு ஐரோப்பிய பாதுகாப்பு சந்தையில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பளிக்கிறது.
சமீபத்தில், ரிலையன்ஸ் நிறுவனம் ஜேர்மனியின் Diehl Defence நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய அறிவிப்புகள்:
‘Make In India’ மற்றும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ முயற்சிகளுக்கேற்ப, இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதியை ஊக்குவிக்கிறது.
ரிலையன்ஸ் டிஃபென்ஸ், DRDO-வின் மேம்பட்ட 155mm அம்புகளின் உற்பத்தியை இந்தியாவில் முதன்முறையாக துவக்கியது.
ரத்னகிரியில் கட்டப்படும் Dhirubhai Ambani Defence City-யில் (DADC) எதிர்கால பாதுகாப்பு உற்பத்திகள் மேற்கொள்ளப்படும்.
ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் அனில் அம்பானி, “உலகில் முதல் மூன்று பாதுகாப்பு ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் டிஃபென்ஸ் வளரவேண்டும் என்பதே எங்கள் இலக்கு” என கூறியுள்ளார்.
Rheinmetall நிறுவனம் உலகளவில் 171 இடங்களில் செயல்படும் முக்கிய பாதுகாப்பு உற்பத்தியாளராக இருக்கிறது. இந்த கூட்டணி, இந்தியாவுடன் அதன் உறவுகளை வலுப்படுத்தும் புதிய கட்டமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |