முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம்
பிரபல ஆசிய நாடொன்று சமீபத்தில் முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
ஜப்பான், சீனாவின் திடீரான ராணுவ நடவடிக்கைகளை எதிர்த்து தனது பாதுகாப்பு வலிமையை மேம்படுத்தும் முயற்சியாக, முதல் முறையாக சொந்த மண்ணில் ஏவுகணை சோதனையை ஜூன் 18-ஆம் திகதி நடத்தியது.
ஹொக்கைடோ தீவில் உள்ள சிசுனாய் Anti-Air Firing Range-ல், Type 88 எனப்படும் surface-to-ship குறிவைக்கும் குறுகிய தூர ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.
இந்த பயிற்சியில் மூவாயிரம் வீரர்கள் பங்கேற்றனர். சோதனைக்கான குறிக்கோளாக, 40 கி.மீ தொலைவில் இருந்த மனிதர்கள் அற்ற படகு பயன்பட்டது.
முந்தைய காலங்களில், இடப்பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு காரணங்களால், ஜப்பான் தனது ஏவுகணை சோதனைகளை அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிலேயே நடத்தியது.
ஆனால் இப்போது, தனிச்செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜப்பான் தாயகத்திலேயே சோதனை நடத்த தொடங்கியுள்ளது.
2022-இல் ஏற்கனவே, ஜப்பான் தனது pacifist அரசியலிலிருந்து வெளியேறி, சீனாவை மிகப்பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அறிவித்து, அமெரிக்காவுடன் நெருக்கமான பாதுகாப்புப் பிணைப்பை வளர்க்கும் ஐந்தாண்டு திட்டத்தை மேற்கொண்டது.
ஜப்பான் தற்போது Tomahawk நீளதூர ஏவுகணைகளை அமெரிக்காவிடமிருந்து வாங்கி கொண்டு வருகிறது. அதேசமயம், 1000 கி.மீ வரை அடையும் Type 12 ஏவுகணைகளையும் உருவாக்கி வருகிறது.
மேலும், சீனாவின் இரண்டு ஏவுகணை கப்பல்கள் மினாமிடோரிஷிமா அருகே செயல்பட்டதை அடுத்து, அங்கு ஏவுகணை சோதனை மையம் உருவாக்கப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Japan missile test 2025, Type 88 missile Japan, Japan China military tension, Hokkaido missile launch, Japan self defense forces, Japan Tomahawk deployment, Minamitorishima missile range, Japan Type 12 missile, Japan US defense strategy, Japan China Russia threat