தேனிலவுக்கு சென்ற இடத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்! அதிர வைத்த சம்பவம்
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், தேனிலவு சென்ற இடத்தில் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்க மாகாணம் டென்னசியைச் சேர்ந்தவர் கிறிஸ்டி ஜியோன் சென்(39). இவருக்கும் பிராட்லி ராபர்ட் டாசன் (38) என்ற நபருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து தம்பியதியர் கடந்த 7ஆம் திகதி பிஜி நாட்டில் உள்ள ட்ருட்லி தீவுக்கு தேனிலவுக்காக சென்றனர். அங்குள்ள ஹொட்டலில் இருவரும் அறையெடுத்து தங்கிய நிலையில், திடீரென தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பிராட்லி, தனது மனைவி கிறிஸ்டியை கழிவறையில் வைத்து அடித்துக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர், கயாக் துடுப்பு படகின் மூலம் அவர் தீவை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
PC: Instagram
இந்த நிலையில், காலை உணவிற்கு தம்பதியர் வெளியே வரவில்லை. அவர்களின் அறையின் வெளியே தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற பலகை வைக்கப்பட்டிருந்தது. அதனால் மதியம் வரை ஓட்டல் பணியாளர் காத்திருந்தார். அதன்பின்னரும் அறையின் கதவு திறக்கப்படவில்லை.
இதன் காரணமாக சந்தேகமடைந்த பணியாளர், தன்னிடம் இருந்த மாற்று சாவியைப் பயன்படுத்தி கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கே ரத்த வெள்ளத்தில் கிறிஸ்டி இறந்து கிடந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
PC: Instagram
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டபோது, கொலை செய்த பிராட்லி இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மடஹவெலியூ தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்பதை கண்டறிந்தனர்.
அங்குள்ள மக்களிடம் பொலிசார் விசாரித்த போது சந்தேகத்திற்கிடமாக நபர் ஒருவர் சுற்றித் திரிவதாக தெரியவந்தது. அடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் பிராட்லி பொலிசாரிடம் சிக்கினார்.
PC: Instagram
அவர் தனது மனைவியை கைது செய்ததை ஒப்புக் கொண்ட நிலையில், பொலிசாரால் கைது செய்யப்பட்டு லாடோகாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.