செலவு செய்ய வரம்பே இல்லாத கிரெடிட் கார்டு - யார் பெற முடியும்?
amex black card : அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் சென்சூரியன் கார்டு என்ற பெயரில் செலவு செய்ய வரம்பே இல்லாத கிரெடிட் கார்டை வழங்கி வருகிறது.
வரம்பில்லாத கிரெடிட் கார்டு
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும், செலவு செய்ய குறிப்பிட்ட அளவிலான வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். ஆனால், ஒரு கிரெடிட் கார்டு செலவு செய்வதற்கான வரம்பே இல்லாமல் உள்ளது.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் சென்சூரியன் கார்டு என்ற பெயரில் இதனை வழங்கி வருகிறது. “பிளாக் கார்டு” என்று அழைக்கப்படும் இந்த கார்டு, செல்வம், தனித்துவம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றின் அடையாளமாக விளங்குகிறது.
இந்த கார்டுக்கு யாரும் விண்ணப்பிக்க முடியாது. தகுதியுடையவர்களை தேர்வு செய்து அந்த நிறுவனமே வழங்கும்.
இந்த கார்டு உலகளவில் ஒரு லட்சத்திற்கும் குறைவான நபர்களிடமே உள்ளதாக கருதப்படுகிறது. 2013ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் 200 பேரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சென்சூரியன் கார்டுகளுக்கு 5,000 டொலர் வருடாந்திர கட்டணமும், 10,000 டொலர் ஒரு முறை தொடக்கக் கட்டணமும் உண்டு.
இந்தியாவில் இந்த கார்டைப் பெற, பிளாட்டினம் கார்டு மூலம் ஆண்டுக்கு 3,50,000 முதல் 5,00,000 டொலர் வரை (ரூ.30 - 40 கோடி வரை) செலவு செய்து, முறையான பணப்பரிவர்த்தனை, அதிக சிபில் ஸ்கோர் வைத்திருக்க வேண்டும்.
இந்த கார்டைப் பயன்படுத்தி செய்யப்பட்ட மிகப்பெரிய கொள்முதல், அமெடியோ மோடிக்லியானியின் ' நூ கூச்சே' ஓவியம் ஆகும். இதை தொழிலதிபர் லியு யிகியான் , 2015 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த கிறிஸ்டிஸ் ஏலத்தில் 17,04,05,000 டொலர்களுக்கு வாங்கினார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு Paytm நிறுவனர் விஜய் சர்மா இந்த கார்டை பயன்படுத்தி உணவகம் ஒன்றில் பில் செலுத்தியதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |