கடற்கரையில் ஒதுங்கிய அந்த பொருள்... தகவலறிந்து விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள்: பின்னர் தெரியவந்த உண்மை
அமெரிக்காவின் ப்ளோரிடா கடற்கரையில் கரையொதுங்கிய ஒரு பொருளைக் கண்ட மக்கள் பதறிப்போய் உடனே பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
அது கடலுக்கடியில் பயன்படுத்தப்படும் ஒரு கண்ணிவெடி. உடனே அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், அந்த வெடியை ஆராய, அது ஒரு டம்மி என தெரியவந்தது.
அதாவது, கடற்படை வீரர்களுக்கு பயிற்சியளிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்து நிரப்பப்படாத ஒரு குண்டு அது.
ஆக, அந்த குண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்த, அதை சோதித்த நிபுணர்கள் ஒரு ஆபத்தும் இல்லை என உறுதிசெய்து தெரிவித்தபின்னரே கடற்கரையில் அமைதி திரும்பியுள்ளது.
அந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட நேரம் அதிகாலை என்பதால் அந்த கடற்கரையில் அதிக கூட்டம் இல்லை. அதே நேரத்தில், அந்த குண்டு அங்கு எப்படி வந்தது என்பது மர்மமாகவே உள்ளது.


