பக்கிங்காம் அரண்மனைக்குள் அழகிய இளம்பெண்ணுடன் தங்கிய இளவரசர்: மன்னர் அதிரடி நடவடிக்கை
பக்கிங்காம் அரண்மனைக்குள் அழகிய இளம்பெண்களை அழைத்துவந்த இளவரசர் ஆண்ட்ரூ, அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஆண்ட்ரூ அரண்மனையிலுள்ள தனது அறையில் தங்கக்கூடாது
மன்னர் சார்லசின் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூ, பருவம் எய்தாத இளம்பெண் ஒருவருடன் பாலுறவு கொண்ட விடயம் அரண்மனை வட்டாரத்தை அதிரவைத்தது நினைவிருக்கலாம்.
Virginia Giuffre என்ற பெண் அந்த விடயத்தை வெளிக்கொண்டுவந்ததைத் தொடர்ந்து ஆண்ட்ரூவின் பதவிகள் மறைந்த மகாராணியாரால் பறிக்கப்பட்டன.
மகாராணியாரின் மறைவுக்குப் பின் மன்னரான சார்லசோ, மேலும் ஒருபடி மேலே போய் பக்கிங்காம் அரண்மனையிலிருந்த ஆண்ட்ரூவின் அலுவலகத்தை மூட உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஆண்ட்ரூ அரண்மனையிலுள்ள தனது வீட்டில் இனி தங்கக்கூடாது என மன்னர் சார்லஸ் தெள்ளத்தெளிவாக கூறிவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அழகிய இளம்பெண்களுடன் அரண்மனையில் தங்கிய இளவரசர்
பக்கிங்காம் அரண்மனையிலுள்ள வீடு ஒன்றில் தனது மனைவி சாராவுடன் வாழ்ந்துவந்த ஆண்ட்ரூ, இருவரும் விவாகரத்து செய்தபிறகும் அதே வீட்டில் தங்கியுள்ளார்.
அந்த அறைகளுக்கு பல அழகிய இளம்பெண்களை அழைத்துவருவாராம் ஆண்ட்ரூ.
குறிப்பாக, அமெரிக்க மொடலான Caprice என்ற அழகிய இளம்பெண்ணுடன் பக்கிங்காம் அரண்மனையில் தங்கியுள்ளார் ஆண்ட்ரூ.
Credit: AP:Associated Press
அப்போது, அந்த பெண்ணை மகாராணியாரின் அரியணையில் அமரவைத்ததுடன், ஒரு அழகிய பாத்திரத்தை அரண்மனையிலிருந்து திருடிச் செல்லவும் அனுமதித்தாராம் ஆண்ட்ரூ.
ஆனால், இரண்டே மாதங்களுக்குள் Caprice ஆண்ட்ரூவைக் கைகழுவிவிட்டார். தனக்கு பதிலாக மஸாஜ் செய்யும் ஒரு அழகிய பெண்ணை ஆண்ட்ரூவுக்கு Caprice அறிமுகம் செய்துவைக்க, அந்த மஸாஜ் பெண்ணுடன் 10 ஆண்டுகள் பழகிவந்தாராம் ஆண்ட்ரூ.
இப்போது, மொத்தமாக பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் ஆண்ட்ரூ!