மயக்கும் ரஷ்ய மொடலுடன் எப்ஸ்டீனை பக்கிங்ஹாம் அரண்மனையில் விருந்துக்கு அழைத்த ஆண்ட்ரூ
ரஷ்ய மொடல் ஒருவருடன் ஜெஃப்ரி எப்ஸ்டீன் லண்டனுக்கு மேற்கொண்ட நான்கு நாள் பயணத்தின்போது முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ பக்கிங்ஹாம் அரண்மனையில் இரவு விருந்துக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்ஸ்டீன் ஆர்வம்
கடந்த வாரம் வெளியான ஆவணங்களில், இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

26 வயதான Vera என்ற அந்த ரஷ்ய மொடலுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் இரவு விருந்தில் எப்ஸ்டீன் கலந்துகொள்ள ஆர்வம் காட்டியதுடன், அந்த மொடலுடன் அரண்மனையில் தனிப்பட்ட சந்திப்பு ஒன்றையும் எப்ஸ்டீன் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார்.
Vera தொடர்பில் மயக்கும் அழகி என்றும் நெருக்கமான நண்பர் என்றும் அந்த மின்னஞ்சலில் எப்ஸ்டீனால் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்ஸ்டீனின் லண்டன் பயணம் நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஆண்ட்ரூ அதற்குப் பிரதிபலனாக எப்ஸ்டீனை நியூயார்க்கில் சென்று சந்தித்துள்ளார்.
கடந்த வாரம், எப்ஸ்டீனின் பாலியல் தொடர்புகளைப் பயன்படுத்தி ஆண்ட்ரூவை ரஷ்யா குறிவைக்க முயன்றதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜேக்கப் ஜூமா
அந்த ரஷ்ய மொடல் முதன்முதலில் 2010-ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள ரிட்ஸ் ஹொட்டலில் அப்போதைய தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா அளித்த இரவு விருந்துக்கு அழைக்கப்பட்டபோது, ஆவணங்களில் இடம்பெற்றார்.
மட்டுமின்றி, குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்காக மட்டும் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ள அந்த மொடல், லண்டனில் இரண்டு வருடங்களாக வசித்து வருவதாக அப்போது குறிப்பிட்டதுடன், கடந்த ஆறு ஆண்டுகளாக மொடலிங் செய்து வருவதாகவும், பாரிஸ், நியூயார்க், பார்சிலோனா மற்றும் ஜப்பான் ஆகிய இடங்களில் வசித்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 2010 செப்டம்பர் மாதம் Sarah Sue, Vera மற்றும் ருமேனியப் பெண் ஒருவர் என நால்வரும் ஆண்ட்ரூவுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் இரவு விருந்தில் கலந்துகொள்வதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த விருந்து முன்னெடுக்கப்பட்டதா என்பது இதுவரை வெளியான ஆவணங்களில் பதிவாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |