11 மணி நேர பொலிஸ் காவல்... ஆண்ட்ரூவை சாதாரணக் குற்றவாளி போல நடத்திய காவல்துறை
முன்னாள் இளவரசரான ஆண்ட்ரூ அதிரடியாகக் கைது செய்யப்பட்ட நிலையில், பொதுவாக குற்றவாளிகளை பொலிசார் நடத்துவது போலவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குற்றவாளிகளுக்கான புகைப்படம்
ஆண்ட்ரூவின் விரல் அடையாளங்கள் பதிவு செய்ததுடன், குற்றவாளிகளுக்கு என பதிவு செய்யப்படும் புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. பகல் 8 மணிக்கு சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் உள்ள அவரது புதிய வீட்டிற்கு சென்ற பொலிசார், அரசாங்க பொறுப்பில் இருந்துகொண்டு தவறான நடத்தைக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர், அவருக்கான உரிமைகள் என்னவென்பதை அவருக்கு வாசித்துள்ளனர். பின்னர், அவர் உடைமாற்றும் வரையில் சில நிமிடங்கள் காத்திருந்து, அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
அவரது குடியிருப்பில் சோதனை முன்னெடுக்கும் போது, அவரின் தனிப்பட்ட இரு பாதுகாவலர்களும் உடனிருந்துள்ளனர். 8.54 மணிக்கு அவர் அய்ல்ஷாம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பரிதாபமான நிலையில்
ஆண்ட்ரூ கைவிலங்கிடப்படவில்லை, ஆனால் நிலையத்திற்கு வந்தவுடன் அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு என மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தகுதியானவரா என்பதை உறுதிப்படுத்த பரிசோதிக்கப்பட்டுள்ளார்.

மட்டுமின்றி அவரது டி.என்.ஏ மாதிரிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், காவல் நிலையத்தில் வைத்து ஒரே ஒருவருக்கு மட்டும் அலைபேசியில் அழைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நீண்ட 11 மணி நேரத்திற்குப் பிறகு மாலை 7 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார், வெளியேறும்போது ஆண்ட்ரூ பரிதாபமான நிலையில் காணப்பட்டார் என்றே கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |