ஐரோப்பிய ஒன்றியம் அதை செய்யாவிட்டால்., ஜேர்மனி சொந்த முடிவை எடுக்கும்: எச்சரிக்கும் மெர்க்கல்
ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசியை ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டாளர் அங்கீகரிக்காவிட்டால், ஜேர்மனி அதன் சொந்த முடிவை எடுக்கும் என அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் Sputnik V கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்த அங்கீகாரம் பெற்றால் ஜேர்மனி உடனடியாக ஆர்டர் செய்ய தயாராக இருப்பதாக மெர்க்கல் தெரிவித்தார்.
"ஐரோப்பிய மருந்துகள் கட்டுப்பாட்டாளரால் (EMA ) அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தடுப்பூசியையும் நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்று நான் கருதுகிறேன்" என்று கூறிய அவர், "அத்தகைய ஐரோப்பிய ஒழுங்கு வரவில்லை என்றால்... நாங்கள் ஜேர்மன் வழியில் செல்லவேண்டியிருக்கும்" என்றார் ஒப்புதல் அளிக்கப்பட்டால் கூட்டணி நாடுகளுடன் இணைந்து மொத்தமாக ஆர்டர் செய்யப்படும் என்றார்.
மருத்துவ இதழான The Lancet கடந்த செவ்வாயன்று வெளியிடப்பட்ட சோதனை முடிவுகளின்படி, Sputnik V தடுப்பூசி COVID-19க்கு எதிராக 91%க்கும் அதிகமாக பலனளிப்பது கண்டறியப்பட்டது.
ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசி இப்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தயாரிக்கப்படலாம், ஏனெனில் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் உற்பத்தி வசதிகளுடன் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) ஒப்பந்தங்களை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.