அனபெல் பொம்மை மாயமானதாக பரவிய வதந்தி! முற்றுப்புள்ளி வைத்த அருங்காட்சியகம்
திகிலூட்டும் பேய் படங்களில் இடம்பெற்ற அனபெல் பொம்மை காணாமல் போனதாக வெளியான வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அனபெல் பொம்மை மீதான வதந்தி
ஹாலிவுட்டின் பிரபலமான திகில் பட வரிசையான 'அனபெல்' படங்களில் இடம்பெற்ற அனபெல் பொம்மை காணாமல் போனதாக அண்மையில் இணையம் முழுவதும் ஒரு வதந்தி காட்டுத்தீயாக பரவியது.
இந்தச் செய்தி அதிவேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்தப் பொம்மை வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தின் அதிகாரிகள் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
உலகம் முழுவதும் அனபெல் திகில் படங்கள் மிகப்பிரபலம். இந்தத் திகில் படங்களின் முக்கிய கதாபாத்திரமான அமானுஷ்ய சக்திகள் நிறைந்த அனபெல் பொம்மை உலகளவில் குக்கிராமங்கள் வரையிலும் சென்று அனைவராலும் அறியப்படுகிறது.
இந்த அமானுஷ்ய பொம்மை, அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
இந்த பொம்மை மாயமாகி விட்டதாக வெளியான செய்தியால், இணையதளங்களில் அதுகுறித்த பல்வேறு கட்டுக்கதைகள் கிளம்பின.
ஆனால், அருங்காட்சியகத்தின் அதிகாரி ஒருவர், இவை அனைத்தும் ஆதாரமற்ற வதந்திகள் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
அனபெல் பொம்மை அதன் குறிப்பிட்ட இடத்திலேயே பாதுகாப்பாக உள்ளது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |