சச்சின் தெண்டுல்கரை தொடர்ந்து இன்னொரு முன்னாள் வீரருக்கும் கொரோனா பாதிப்பு
சச்சின் தெண்டுல்கரை தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் ராய்பூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டியில் சச்சின் தெண்டுல்கர் பங்கேற்றிருந்தார்.
கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொண்டதாகவும், இருப்பினும் தனக்கு அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதாகவும் சச்சின் கூறியுள்ளார்.
அவர் விரைவில் நலம்பெற அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சச்சினை தொடர்ந்து அவரது லெஜண்ட் அணியில் விளையாடிய யூசுப் பதானுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.