ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் மேலும் ஒரு பயங்கர பிரச்சினை: ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியாலும் பிரச்சினையாம்
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி இரத்தக்கட்டிகளை உருவாக்குவது தெரியவந்ததையடுத்து பல நாடுகள் அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்திவிட்டன.
உதாரணமாக, பிரித்தானியாவின் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராசெனகா தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் மேலும் ஒரு பயங்கர பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனித உடலிலுள்ள இரத்தக்குழாய்களை வெயின் (Vein)ஆர்ட்டரி (Artery) என இருவகையாக பிரிப்பார்கள்.
மிக மெல்லிய நுண் இரத்தக்குழாய்களை கேப்பில்லரி (Capillary) என அழைப்பார்கள்.
தற்போது, இந்த நுண் இரத்தக்குழாய்களில்தான் ஒரு பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி எடுத்துக்கொள்வோர் சிலருக்கு, இந்த நுண்ணிய இரத்தக்குழாய்கள் வெடித்து தசைகளுக்குள்ளும், உடலில் உள்ள பை போன்ற பகுதிகளுக்குள்ளும் இரத்தம் கசிகிறதாம்.
இதனால் திடீரென இரத்த அழுத்தம் குறைவாகும், அதை கவனிக்காமல் விட்டுவிட்டால், உடல் உறுப்புகள் செயலிழந்துபோகும்.
இதுவரை மூன்று பேருக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக பிரித்தானிய மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, தற்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியிலும் அபூர்வமாக இரத்தக்கட்டிகள் உருவாவதாக தெரியவந்துள்ளதாக ஐரோப்பிய மருந்துகள் ஏஜன்சி தெரிவித்துள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெற்றுக்கொண்ட நான்கு பேருக்கு இரத்தக்கட்டிகளுடன் இரத்தத்தட்டுகள் குறைவு பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது, அதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
வட கரோலினாவிலுள்ள ஒரு தடுப்பூசி மையத்தில் 18 பேருக்கு பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஆராய்ந்துவருவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.