பனிப்பாறை உருகி தோன்றிய அழகான வடிவங்கள்.., ட்ரோன் மூலம் படம் பிடித்த புகைப்படங்கள்
பனிப்பாறை உருகும் நகர்வை டிரோன் கமெரா மூலம் படம் பிடித்த நிபுணர் குழு அப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
உருகிய பனிப்பாறை
தென்துருவத்தில் பணியால் சூழப்பட்டும், பனிப்பாறைகளாலும் நிறைந்துள்ள கண்டம் தான் அண்டார்டிகா கண்டம். இந்த பகுதியில் மனிதர்கள் வசிக்க முடியாத சூழலால் ஆராச்சியாளர்களும், சுற்றுலா பயணிகளும் மட்டுமே அங்கு சென்று வருவார்கள்.
இங்குள்ள பனிப்பாறைகளில் மிக பெரியது ஏ23ஏ (A23a). இந்த பனிப்பாறையானது 1986 -ம் ஆண்டுகளிலேயே அப்பிரதேசத்தின் கடல் பகுதியிலிருந்து உடைந்து நகர்ந்து செல்ல ஆரம்பித்தது.
இது, கடந்த 30 வருடங்களாக Weddell Sea பகுதியின் ஆழத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. இந்த பனிப்பாறை 4000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும்.
அழகிய உருவங்கள்
இது அங்கிருக்கும் பனி நீர் சுழற்சியால் South Orkney Islands-யை நோக்கி மெல்ல நகர தொடங்கியது. இந்நிலையில், நிபுணர் குழு ஒன்று பனிப்பாறையின் நகர்வை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
தினமும் உருகும் A23a பனிப்பாறையில் மிகப்பெரிய வளைவுகளும், குகைகளும் இயற்கையாக தோன்றியுள்ளன. எப்போது என்று உறுதியாக கூறமுடியவில்லை என்றாலும் சில வருடங்களில் A23a பனிப்பாறை முழுவதுமாக உருகிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |