2 வெவ்வேறு தடுப்பூசிகளை கலந்து போடுவதால் என்ன நடக்கும் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்
அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை அடுத்தடுத்து செலுத்தி கொள்வதால் 85 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக ஆய்வில் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை கொரோனாவிற்கு எதிராக மருந்து கண்டுபிடிக்காத நிலையில் தடுப்பூசி மட்டுமே பெரும் ஆதரவாக செயல்பட்டு வருகின்றது.
உலகம் முழுவதும் பல தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. அந்த வகையில் எந்த தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் குறிப்பிட இடைவெளியில் அடுத்த தவனையும் செலுத்தி கொள்வது அவசியம்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. அதுபோல ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் இன்னொரு வடிவம் தான் ஸ்புட்னிக் லைட் ஆகும்.
இந்த 2 தடுப்பூசிகளை 2 தவணையாக அதுவும் அடுத்தடுத்து செலுத்தி கொண்டால் என்ன நடக்கும் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ரஷ்யா முதலீட்டில் அஜர்பைஜான் நாட்டில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் சுமார் 100 பேருக்கு முதலில் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 29 நாட்கள் கழித்து ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியும் போடப்பட்டது. தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட 57வது நாட்களில் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக ஆய்வில் வெளியாகியுள்ளது.