கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ள புடின்! அளித்துள்ள உறுதி.. முக்கிய தகவல்
உக்ரைன் உடனான பேச்சுவார்த்தை சாதகமான பலனை தரும் என்று தாம் நம்புவதாக புடின் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்டரஸ், நேற்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மாஸ்கோவில் சந்தித்து பேசினார். அப்போது உக்ரைனில் மரியுபோல் நகரில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற உதவுமாறு குட்டரஸ் கேட்டுக் கொண்டார்.
இதற்கு கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ள புடின், உக்ரைன் நாட்டுக்கு எதிராக ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகள் போராடி வரும் டான்பாஸ் பிராந்திய பிரச்சனைகளில் முடிவு எட்டப்படாமல் பாதுகாப்பு உத்தரவாதத்தில் கையெழுத்திட முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
உக்ரைன் உடனான பேச்சுவார்த்தை சாதகமான பலனை தரும் என்று தாம் நம்புவதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.
மரியுபோல் நகரத்தில் இருந்து பொதுமக்களை மீட்க ஒத்துழைப்புத் தருவதாக புடின் உறுதி அளித்துள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை சர்வதேச செஞ்சுலுவை தீவிரப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.