இந்திய பாகிஸ்தான் போட்டி: நன்றி தெரிவித்த இலங்கை ஜனாதிபதி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்பான பிரச்சனையைத் தீர்த்து, போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதி செய்ததற்காக ஐசிசிக்கு இலங்கை ஜனாதிபதி திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.
அனுர குமார திசாநாயக்க நன்றி
ஐசிசியுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட ஒப்புக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி கொழும்பில் நடைபெற உள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாகியுள்ளது.
இதுதொடர்பான முடிவு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
1996 உலகக்கிண்ணம்
மேலும், இந்தப் பிரச்சனையைத் தீர்த்து போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதி செய்ததற்காக ஐசிசிக்கு நன்றி தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் 1996 உலகக்கிண்ணத்திற்கு சற்று முன்பு, சுற்றுப்பயணம் செய்ய மறுத்து தங்கள் போட்டியை இழந்த பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் எவ்வாறு தங்களுடன் நின்றன என்பதை அவர் நினைவுகூர்ந்தார்.
அத்துடன் ஒருங்கிணைந்த லெவன் அணியை பாகிஸ்தானில் விளையாட அனுப்பியதையும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதேபோல், இலங்கையின் விளையாட்டு நிர்வாகக் குழு, கடினமான காலங்களில் பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவை நினைவூட்டியதுடன், 2009யில் பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலையும் முன்பு குறிப்பிட்டது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |