இந்தியாவை யார் வேண்டுமானாலும் வீழ்த்தலாம்: முன்னாள் இங்கிலாந்து வீரர் ஹுசைன் வெளிப்படை
டி20 உலகக்கிண்ணம் தொடரில் எந்த அணி வேண்டுமானாலும் கோஹ்லியின் அணியை சுலபமாக தோற்கடித்துவிடும் என ஜாம்பவான் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கிண்ணம் தொடரில் தற்போது தகுதிச்சுற்றுப்போட்டிகள் நடந்து முடிந்து 23ம் திகதி முதல் சூப்பர் 12 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், கிண்ணம் வெல்ல அதிக வாய்ப்புகள் கொண்ட அணிகளில் இந்திய அணி முதன்மையானதாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டரில் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ் என சிறப்பான வீரர்கள் இருப்பதால் அதீத நம்பிக்கையை வைத்துள்ளனர்.
ஆனால் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் வெளியிட்டுள்ள கருத்துகள், இந்திய அணியின் உண்மை நிலையை வெளிச்சமிட்டு காட்டுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் பேசிய அவர், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஏனென்றால் இது டி20 போட்டி. என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.
ஒரு தனிநபரின் சிறப்பான ஆட்டம் அல்லது ஒருவரின் 70 - 80 ஓட்டங்கள், குறிப்பிட்ட 3 பந்துகள் என யார் வேண்டுமானாலும் ஆட்டத்தை ஒரே ஓவரில் மாற்றி அமைக்ககூடும்.
மட்டுமின்றி, இந்திய அணி எவ்வளவு சிறப்பாக விளையாடினாலும் நாக் அவுட் போட்டிகளில் சொதப்புவதை அனைவரும் அறிவோம். கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை இந்தியா சென்றது.
போட்டியும் இந்தியாவின் பக்கமே கடைசி வரை இருந்தது. திடீரென அந்த போட்டி ஒரு குறைந்த இலக்கை துரத்தும் போட்டியாக மாறிவிட்டது.
இந்தியாவிடம் பிளான் பி என்பதே இல்லை. ஒரே ஒரு திட்டத்துடன் நாக் அவுட் போட்டிகளில் நம்பிக்கையாக களமிறங்குகின்றனர்.
அது சொதப்பிவிட்டால் ப்ளான் பி என்பதே இல்லை. இது ரசிகர்களுக்கும் வருத்தத்தை கொடுக்கிறது என வெளிப்படையாக தெரிவித்துள்ளார் நாசர் ஹுசைன்.