ஆப்பிள் சோதனை செய்துவரும் ஸ்மார்ட் கண்ணாடி., 2027-ல் அறிமுகம்
ஆப்பிள் நிறுவனம், 2027-இல் அறிமுகப்படுத்தும் நோக்கில் நான்கு வகையான ஸ்மார்ட் கண்ணாடி வடிவமைப்புகளை தற்போது சோதனை செய்து வருகிறது.
இந்த கண்ணாடிகள், பெரிய மற்றும் சிறிய செவ்வக வடிவங்கள், மேலும் வட்ட அல்லது ஒவல் வடிவங்களில் கிடைக்கின்றன.
நிறங்களில் கருப்பு, கடல் நீலம் மற்றும் லைட் பிரவுன் ஆகியவை வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கண்ணாடிகள், டிஸ்ப்ளே இல்லாமல் வெளியிடப்பட உள்ளன. புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு, அழைப்புகள், இசை, Siri குரல் கட்டுப்பாடு போன்ற அம்சங்கள் முக்கியமாக இருக்கும்.

இதனால், இவை ஆப்பிளின் Vision Pro-வுடன் ஒப்பிடும்போது, Meta-வின் Ray-Ban Smart Glasses-க்கு அருகிலான தயாரிப்பாகக் கருதப்படுகின்றன.
ஆப்பிள், Vision Pro Mixed Reality ஹெட்செட் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், சிறிய, எளிய மற்றும் குறைந்த விலை கொண்ட அணிகலன்கள் மீது கவனம் செலுத்துகிறது.
Meta ஏற்கனவே AI அம்சங்களுடன் கூடிய Ray-Ban கண்ணாடிகளை மில்லியன் கணக்கில் விற்றுள்ளது. இதனால், ஆப்பிள் தனது திட்டங்களை மாற்றி, விரைவான ஸ்மார்ட் கண்ணாடி முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த கண்ணாடிகள் AI அம்சங்கள், குரல் கட்டுப்பாடு, கமெரா ஆகியவற்றுடன் வரலாம். ஆனால், தனியுரிமை சிக்கல்கள் முக்கிய சவாலாக இருக்கும்.
Meta-வின் கண்ணாடிகள் தொடர்பான தரவு சேகரிப்பு விவகாரங்கள் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், ஆப்பிள் தனது “Privacy First” கொள்கையை வலியுறுத்தி, சந்தையில் நம்பகத்தன்மையை பெற முயற்சிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#Apple #SmartGlasses #WearableTech #VisionPro #RayBanSmartGlasses #AI #Privacy