வீடு திரும்பினார் ஏ.ஆர். ரஹ்மான்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன் ஏ.ஆர். அமீன்
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான விளக்கத்தை அவரது மகன் ஏ.ஆர். அமீன் அளித்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வதந்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் காரணத்தை அவரது ஏ.ஆர். அமீன் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஏ.ஆர். அமீன் விளக்கம்
ஏ.ஆர். அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக தெரிவித்துள்ள தகவலில், "எனது தந்தை ஏ.ஆர். ரஹ்மான் நீர்ச்சத்து(நீரிழப்பு) குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் தற்போது அவர் நலமாக உள்ளார்" என்றும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நல்ல உடல் நிலையுடன் வீடு திரும்பி விட்டதாகவும் குறிப்பிட்டு, மருத்துவ அறிக்கையையும் அவர் பகிர்ந்துள்ளார்.
நண்பர்கள், குடும்பத்தினர், மற்றும் ரசிகர்கள் என அவர் மீது அனைவரும் காட்டும் அன்புக்கும், அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மிக்க நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
All is well with @arrahman ♥️
— MovieCrow (@MovieCrow) March 16, 2025
It’s dehydration symptoms and after routine checkup he is discharged now. #ArRahman pic.twitter.com/60mSx9cfjz
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |