மகளின் மரண செய்தியை டிவியில் பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை! பதறி துடித்த பரிதாபம்: நடந்தது என்ன?
அர்ஜெண்டினாவில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நபர், விபத்தி மகள் மற்றும் பேத்தி இறந்த செய்தியைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.
அர்ஜெண்டினாவின் Cordoba-வில் நடந்த விபத்து ஒன்றில் Alma Mia Molina(12) மற்றும் Agustina Reynoso(16) என்ற இரண்டு பேர் உயிரிழந்துவிட்டதாக செய்தி வந்துள்ளது.
இதைக் கண்ட Rolando Busto அது நம்மளுடைய குழந்தைகளாக இருந்துவிடக் கூடாது என்று கடவுளை பிரார்த்தனை செய்து கொண்டிருக்க, அவர் பயந்தது போன்றே, உயிரிழந்தது அவரின் பேத்தி மற்றும் மகள் என்பது உறுதியானது.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Rolando Busto-வின் மகன் Matias Bustos Reynoso(32), விபத்து நடந்த அன்றைய தினம் காரை ஒட்டிச் சென்றுள்ளார்.
அப்போது அவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததால், 131 அடி தூரம் கொண்ட பாறையில் இருந்து கீழே விழுந்து கார் விபத்துக்குள்ளானது. இதில் காரின் பின்னால் சீட் பெல்ட் போட்டிருந்த இரண்டு சிறுமிகளும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
கார் ஓட்டிய டிரைவர் Matias Bustos Reynoso மற்றும் அவரின் 29 வயது கர்ப்பிணி சகோதரி இருவரும் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பெரும் விபத்து Cordoba நகருக்கு அருகில் இருக்கும் E-54 பாதையில் 54 கிலோமீற்றர் தொலைவில் நடந்துள்ளது. கார் சாலையில் இருந்து விலகி, பாதுகாப்பு தண்டவாளத்தை உடைத்து, பின்னர் 131 அடி உயரமான பாறையில் இருந்து கார் கீழே விழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விபத்துக்குள்ளான்வரளின் தந்தையும் மற்றும் தாத்தாவுமான Rolando Busto கூறுகையில், நான் செய்தியைப் பார்த்தவுடன், அது என் குழந்தைகளாக இருக்க கூடாது என்று பிரார்த்தனை செய்தேன்.
நான் அவர்கள் நான்கு பேரையும் தொடர்பு கொள்ள முயற்சித்தேன், ஆனால் எந்த ஒரு பதிலும் கிடைக்கவிலை. அடுத்த சில நிமிடங்களில் அது அவர்கள் தான் எனவும், அதில் இரண்டு பேர் உயிரிழந்துவிட்டதாகவும் என செய்தி வந்தது.
விபத்தின் போது, மூடு பனி இருந்த காரணத்தினால், கார் கட்டுப்பாட்டை இழந்து, விபத்தில் சிக்கியுள்ளதாக வேதனையுடன் கூறினார். மேலும், சகோதரி மற்றும் மருமகள் இருவரும் இறந்த செய்தியைக் கேட்டு, காரை ஓட்டி வந்த Matias Bustos Reynoso கடும் அதிர்ச்சியில் உள்ளார்.