அமேசானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி
ஈகுவடாரின் ராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியதில் 8 பேர் பலியாகினர்.
ராணுவ ஹெலிகொப்டர்
ஈகுவடார் நாட்டில் Mi-171E எனும் ராணுவ ஹெலிகொப்டர், வெள்ளிக்கிழமை காலை 9.36 மணியளவில் Pastaza's Tiwino செக்டர் எனும் அமேசான் பகுதியில் விபத்திற்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டரைக் கண்டுபிடிக்க, 2 இலகுரக ஹெலிகொப்டர்களை உள்ளடக்கிய தேடுதல் பணி தொடங்கப்பட்டது.
இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணம் செய்த 5 வீரர்கள், இடர் மேலாண்மை செயலகத்தின் 3 அதிகாரிகள் என 8 பேர் உயிரிழந்துவிட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலங்கள் மீட்பு
விமான பைலட் மேஜர் ஆன்ட்ரஸ் சியரா, துணை விமானியாக இருந்த லெப்டினன்ட் ஜெய்ம் கார்டோன்ஸ், விமானப் பொறியாளர் சார்ஜெண்ட் லியோனார்டோ குட்டரெஸ் மற்றும் மெக்கானிக்கல்களாக இருந்த கார்ப்பரல்கள் கிறிஸ்டியன் மோரல்ஸ் மற்றும் எட்கர் மான்டெஸ்டியோகா ஆகியோர் பலியானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன் காட்யா அராஜென், டியாகோ இமா மற்றும் எரிக் ரெய்ஸ் ஆகியோரும் ஹெலிகொப்டரில் SGR நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பயணித்தனர் என்றும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், சீரற்ற காலநிலை காரணமாக சடலங்கள் இன்று மீட்கப்படும் என அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |