முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவை கைது செய்ய பிடியாணை
court issued arrest warrant for ex srilankan cricketer aravinda de silva: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
அரவிந்த டி சில்வாவை கைது செய்ய பிடியாணை
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா 1984 முதல் 2003 வரை இலங்கை தேசிய அணிக்காக விளையாடியுள்ளார்.

1996 ஆம் ஆண்டில் உலக கிண்ணம் வென்ற இலங்கை அணியிலும் இடம் பிடித்திருந்தார்.
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்காக ஏர்பஸ் விமானங்களைக் வாங்கிய போது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவர் கபில சந்திரசேன.

இவர் கடந்த மே மாதம் 8 ஆம் திகதி கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள அரவிந்த டி சில்வாவின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்கவை கைது செய்ய கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

அரவிந்த டி சில்வாவின் தாயார் ராணி டி சில்வா செப்டம்பர் 14 ஆம் திகதி காலமானார். நேற்று அவரது இறுதிச் சடங்குகள் மற்றும் தகனச் சடங்குகள் நடைபெற்ற நாளில் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.
அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரவிந்தா டி சில்வாவின் தாயார் காலமானதாலும், அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறவிருந்ததாலும் அவர்களால் ஆஜராக இயலவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.