இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டிக்கு ஐசிசி கண்டனம்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டிக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அணிக்கு அதிர்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் பந்துவீச்சுக்காக 'ஆட்டநாயகி' விருது பெற்ற வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டிக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வீராங்கனை நிடா தாருக்கு எதிராக, வேகப்பந்து வீச்சாளர் ஐசிசி நடத்தை விதிகளை மீறினார். இது தொடர்பாக நடுவர் புகார் அளித்துள்ளார். அருந்ததியும் தன் தவறை ஒப்புக் கொண்டார்.
ஐ.சி.சி.யின் ஒழுங்கு நடவடிக்கை குழு அவருக்கு ஒரு De-merit புள்ளியை ஒதுக்கியது.
பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் அருந்ததி ரெட்டி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். அவர் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Arundhati Reddy punished by ICC