அஷ்டமச் சனியின் காலத்தில் இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டுமாம்! அவசியம் தெரிஞ்சிகோங்க
ஒருவரின் முன் ஜென்ம கர்ம வினைகளை பொருத்து சனிபகவான் அவர்களுக்கான தண்டனையை கொடுப்பதே ஏழரை சனி அல்லது அஷ்டமத்து சனி எனப்படும்.
அஷ்டம சனி ஏற்பட்டிருக்கும் நபர்களுக்குக் இரண்டரை ஆண்டு காலம் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்ட வாறே இருக்கும். அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வ புண்ணிய பலன்கள் அதிகம் இல்லாதவர்கள் விபத்துகளை சந்திக்க நேரலாம்.
அதிலும் இந்த காலத்தில் ஒரு சில விஷயங்களை தவிர்க்க வேண்டியது அவசியமானது ஆகும். அந்தவகையில் தற்போது இந்தகாலத்தில் எவற்றை எல்லாம் தவிர்க்கவேண்டும் என்று இங்கே பார்ப்போம்.
- முதலாவதாக யாருக்கும் வாக்கு கொடுக்கக் கூடாது. தேவையில்லாத அநாவசியப் பேச்சை குறைக்க வேண்டும். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது.
- விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
- பொதுவாக அஷ்டமத்து சனியில் கடன், நோய் அல்லது எதிரிகளைத் தான் சனிபகவான் கொடுப்பார்.
- கடனையும் எதிரிகளையும் ஓரளவு சமாளிக்க முடியும். ஆனால் நோய் வந்தால் சமாளிக்கவே முடியாது என்பதால் துரித உணவுகள், மது, புகை இந்த மாதிரி பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
- புதிய, பெரிய தொழில் முதலீடுகள், ஒப்பந்தங்களைத் தவிர்க்க வேண்டும்.
- அடுத்தது வேலையில் இருப்பவர்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு இந்த மாதிரி காரணங்களுக்காக இருக்கும் வேலையை உதறிவிட்டு புதிய வேலைக்கு முயற்சிக்க கூடாது. இந்த நேரம் இருக்கும் வேலையை காப்பாற்றிக் கொள்வதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.