இந்திய வீரர் அஸ்வினுக்கு அடித்த லொட்டரி! செம அதிர்ஷ்டசாலி அவர் என புகழும் பிரபல வீரர்
தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் ஒருநாள் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளது குறித்து பிரபல வீரர் ரீதிந்தர்சிங் சோதி பேசியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், அஸ்வினை தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது. இதன்மூலம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ரீதிந்தர்சிங் சோதி, அஸ்வினுக்கு அடித்திருப்பது லொட்டரி பரிசு போன்றது என்றார்.
அதாவது, ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெறவில்லை. இதனால், கிட்டத்தட்ட ஓரம்கட்டப்பட்ட நிலையிலேயே இருந்த அஸ்வின், இந்திய அணிக்கு திரும்பியிருப்பது அவருக்கு அடித்துள அதிர்ஷடம் என சோதி குறிப்பிட்டுள்ளார்.
தேர்வுக்குழு மற்றும் டிராவிட், அணி நிர்வாகத்தினர் அஸ்வின் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதன் காரணமாகவே அவருக்கு அணியில் இடம் கிடைத்திருக்கிறது என்றும் கூறினார்.