இந்திய அணியில் அஸ்வினுக்கு இடம் கொடுத்தது ஏன்? கோலி கொடுத்த தெளிவான விளக்கம்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில், அஸ்வினுக்கு இடம் கொடுத்தது ஏன் என்பது குறித்து, அந்தணியின் தலைவர் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடந்து முடிந்த நிலையில், அடுத்து டி20 உலகக்கோப்பை தொடர் இங்கு நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்திய அணி வரும் 24-ஆம் திகதி தன்னுடைய முதல் போட்டியிலே பாகிஸ்தானை எதிர் கொள்ளவுள்ளது.
இந்நிலையில், இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில், நான்கு ஆண்டுகளுக்கு பின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அஸ்வினை இப்போது ஏன் எடுக்க வேண்டும், அவர் ஒரு அவுட் ஆப் பார்ம் என்று முன்னணி வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து இந்திய அணியின் தலைவரான கோலி கூறுகையில், அஷ்வினின் திறமைக்கு கிடைத்த வெகுமதிதான் இந்த வாய்ப்பு. ஒரு காலத்தில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த அஷ்வினின் பவுலிங்கில் இடையில் தொய்வு ஏற்பட்டது.
ஆனால் அஷ்வின் அவரது பவுலிங்கை மேம்படுத்தியுள்ளார். ஐபிஎல்லில் கடந்த 2 ஆண்டுகளாக சிறந்த பேட்ஸ்மேன்களை திணறடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அஸ்வின் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருவதால் தான் அவருக்கு டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆப் ஸ்பின்னர் ஒருவர் தேவை என்ற வகையில், அஷ்வின் அணியில் இடம்பிடித்துள்ளார். அவரது அனுபவமும் திறமையும் தான் அவர் மீண்டும் அணியில் இடம்பிடிக்க காரணம் என்று கோலி கூறியுள்ளார்.