கொரோனா தடுப்பூசிகளால் அதற்கு பலனேதும் இல்லை: நோபல் பரிசு வென்றவர்கள் எச்சரிக்கை
நாளும் உருமாற்றம் காணும் கொரோனாவில் இருந்து தடுப்பூசிகள் நம்மை காக்கும் என உலகம் நம்புவது முட்டாள்தனமானது என நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
டாக்டர் அபிஜித் பானர்ஜி மற்றும் டாக்டர் எஸ்தர் டுஃப்லோ ஆகிய நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளே தற்போதைய சூழல் தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியல் தலைவர்களும் விஞ்ஞானிகளும் தங்கள் நாட்டு மக்களை காப்பாற்றும் பொருட்டு புதிய பூஸ்டர் ஷாட்கள், புதிய தடுப்பூசிகள், மருத்துவ ரீதியான மாஸ்குகள் ஆகியவற்றைத் தயாரிக்க வேண்டியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கைகளை குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தனர். கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இதுவரை 3.2 மில்லியன் மக்கள் பலியாகியுள்ளனர்.
மேலும், மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து புதிய உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றும் வியாபித்து வருகிறது.
இந்தியாவை பொருத்தமட்டில் இதுவரை 230,000 பேர்கள் கொரோனாவால் இறந்துள்ளனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் மந்தமான திட்டமிடல் ஏதுமற்ற தடுப்பூசி வினியோகத்தால் இறப்பு எண்ணிக்கை நாளும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.
மேலை நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளால் கண்டிப்பாக உரிய பலன் ஏதும் இருக்கப்போவதில்லை என டாக்டர் பானர்ஜி மற்றும் டாக்டர் எஸ்தர் டுஃப்லோ தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனை படுக்கை வசதிகள் போதிய அளவுக்கு இல்லாத நாடுகள் மிகப் பெரிய இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்படாமல் இருக்க, இப்போதே துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் டாக்டர் பானர்ஜி மற்றும் டாக்டர் டுஃப்லோ கேட்டுக்கொண்டுள்ளனர்.