அஸ்ட்ராஜெனேகாவின் 'Cocktail' தடுப்புமருந்து - இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி!
அஸ்ட்ராஜெனேகாவின் 'Antibody Cocktail' எனப்படும் COVID-19 தடுப்புமருந்துக் கலவை, இறுதிக்கட்டச் சோதனையில் நல்ல பலன் கொடுத்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
AstraZeneca-வின் AZD7442 எனும் அந்தத் தடுப்புமருந்துக் கலவை, கடுமையான நோய்த்தொற்றுப் பாதிப்பைப் பெருமளவில் தடுக்கக்கூடியது என்றும் கூறப்படுகிறது.
கொரோனா தொற்றுக்கு ஆளானோர், தொடக்கத்திலேயே இந்த தடுப்புமருந்துக் கலவையைப் பயன்படுத்தினால், நோய் கடுமையாகாது என்றும், இறப்பு அபாயத்தை 50% குறைக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
தொடர்ந்து, அடுத்த 6 மாதம் அவர்களுக்குத் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Representative image
இந்த தடுப்புமருந்துக் கலவையின் சோதனைத் தரவுகள் குறித்து, அதிகாரிகளுடன் பேசவிருப்பதாக அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் கூறியுள்ளது.
இயல்பாகவே COVID-19 எதிர்ப்புசக்தி இல்லாதவர்களுக்கும் Antibody Cocktail உதவும் என்றும் நிறுவனம் நம்புகிறது.
இந்த தடுப்புமருந்துக் கலவையின் அவசரப் பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்குமாறு AstraZeneca நிறுவனம், கடந்த வாரம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டாளரான உணவு மற்றும் மருந்து நிர்வாகக்கத்திடம் (FDA) கோரிக்கை விடுத்துள்ளது.