ASUS இனி ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில்லை - AI மற்றும் ரோபோடிக்ஸ் மீது கவனம்
தைவானைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ASUS, இனி புதிய ஸ்மார்ட்போன் மொடல்களை அறிமுகப்படுத்தாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் மூலம், பிரபலமான ROG Phone மற்றும் Zenfone தொடர்கள் நிறுத்தப்படுகிறது.
ASUS தலைவர் ஜானி ஷி, “ஸ்மார்ட்போன் சந்தை தற்போது மிகுந்த போட்டியுடனும், குறைந்த லாபத்துடனும் உள்ளது. எனவே, நிறுவனம் தனது முதலீடுகளை AI, ரோபோடிக்ஸ், சர்வர்கள் மற்றும் physical AI hardware போன்ற துறைகளில் திருப்புகிறது” எனக் கூறியுள்ளார்.
இது ASUS-க்கு ஒரு பெரும் மூலோபாய மாற்றம் ஆகும். பல ஆண்டுகளாக, நிறுவனம் கேமிங் மற்றும் எந்திரவியல் ஆர்வலர்களுக்கான ஸ்மார்ட்போன்களில் தனித்துவமான இடத்தை பெற்றிருந்தது.

ஆனால், இனி AI சாதனங்கள், edge computing, robotics போன்ற துறைகள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கும்.
அதே நேரத்தில், ASUS தற்போதைய பயனர்களுக்கு software updates மற்றும் after-sales support தொடர்ந்து வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. இதனால், ROG மற்றும் Zenfone பயனர்கள் சேவையில் எந்த குறையும் ஏற்படாது.
ASUS-ன் இந்த முடிவு, உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையின் கடுமையான போட்டியை வெளிப்படுத்துவதோடு, AI மற்றும் ரோபோடிக்ஸ் துறையில் புதிய முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
ASUS stops making smartphones ROG Zenfone, ASUS smartphone production ends AI robotics shift, ASUS ROG Phone discontinued AI future plans, ASUS Zenfone discontinued company AI robotics focus, ASUS ends smartphone business LatestLY report, ASUS AI robotics investment after phone exit, ASUS smartphone shutdown global tech industry news, ASUS ROG Zenfone users support updates 2026, ASUS AI robotics strategy technology transformation, ASUS smartphone exit company future direction