எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நல்லது?
பொதுவாக உடற்பயிற்சி என்பது நமது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியும், உற்சாகமும் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் நாம் உடற்பயிற்சி செய்வதில் ஒரு பலன் இருக்கும். ஆனால் சிலருக்கு காலையிலா மாலையிலா உடற்பயிற்சி செய்வது என்ற சந்தேகம் காணப்படுவதுண்டு.
உண்மையில் உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது? என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
எந்த நேரத்தில் செய்வது நல்லது?
நாம் காலையில் உடற்பயிற்சி செய்வதை விட மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதுதான் உடலுக்கு மிகவும் நல்லது .
ஏன் மாலை நேரத்தில் செய்ய வேண்டும்?
- காலையில் உடற்பயிற்சி செய்தால் தசை செல்களைத் தூண்டி உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு ஒரே சீராக இருக்கிறது.
- மாலை நேரத்தில் செய்யப்படும் உடற்பயிற்சியால் உடலின் முழு எனர்ஜி லெவல் அதிகரிக்கிறது. அதனால் நீண்ட நேரம் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.
- காலையில் மற்றும் மாலையில் உடற்பயிற்சி தொடர்ந்து செய்வதால், அது நேரடியாக உடலின் சர்காடியன் கடிகாரத்தை (உயிரியல் கடிகாரம்) ஒழுங்குபடுத்தும் HIF 1 ஆல்பா என்ற புரதத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் மாலை நேர உடற்பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கிறது.
- காலை வேளையை விட மாலை வேளையில் உடற்பயிற்சி செய்வதற்கு உடல் நன்கு ஒத்துழைப்பு தரும். இதனால் நன்கு உடற்பயிற்சியில் ஈடுபடலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.