இஸ்ரேலியர்கள் மீது எகிப்தில் பயங்கரவாத தாக்குதல்: சுற்றுலா பேருந்தை குறி வைத்து தாக்கிய பொலிஸ்
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், எகிப்தில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.
நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக கடத்திச் சென்றதை அடுத்து, இஸ்ரேல் தனது அதிகாரப்பூர்வமான போர் பிரகடனத்தை அறிவித்தது.
இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவப்படையினர் பாலஸ்தீனத்தின் மீது தொடர் வான் தாக்குதலை நடத்தி காசா நகரை உருக்குலைத்து வருகின்றனர்.
இந்த மோதலில் இரு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து இருப்பதுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்
இந்நிலையில் எகிப்து தலைநகர் அலெக்சாண்டிரியாவில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பேருந்து மீது எகிப்து பொலிஸ் அதிகாரிகள் ஒருவர் துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளார்.
BREAKING:
— Visegrád 24 (@visegrad24) October 8, 2023
Terror attack against Israel tourists in Alexandria, Egypt
An Egyptian police officer used his gun to start firing on a bus of Israeli tourists.
At least two Israeli were killed, many more are wounded pic.twitter.com/j8hQkI9OqK
இதில் இரண்டு இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
வெளிநாடு ஒன்றில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |