தேவாலய வளாகத்தில் புகுந்து துப்பாக்கிச்சூடு! 21 பேர் உயிரிழந்த சோகம்
காங்கோ நாட்டில் கிளர்ச்சியாளர்கள் தேவாலய வளாகத்தில் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.
கத்தோலிக்க தேவாலயத்தில்
ஆப்பிரிக்க நாடான காங்கோவின் Komandaவில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலய வளாகத்திற்குள் நேச நாட்டு ஜனநாயகப் படை உறுப்பினர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும் பல வீடுகள் மற்றும் கடைகளும் எரிக்கப்பட்டன. இதில் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து சிவில் சமூக ஒருங்கிணைப்பாளர் டியுடோன் துரந்தபோ கூறுகையில்,
"21க்கும் மேற்பட்டோர் உள்ளேயும், வெளியேயும் சுட்டுக் கொல்லப்பட்டனர். குறைந்தது மூன்று பேர் உடல் கருகி இறந்தனர். பல வீடுகள் எரிக்கப்பட்டதாக நாங்கள் பதிவு செய்துள்ளோம். ஆனால் தேடுதல் தொடர்கிறது" என்றார்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் இந்த மாத தொடக்கத்தில் இந்தக் குழு இடூரியில் டஜன் கணக்கான மக்களைக் கொன்றது ஒரு "இரத்தக்களரி" என்று விவரித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |