27 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட முன்னாள் தலைவர் வீட்டுக் காவலுக்கு மாற்றம்: 3,000 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு
மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆசிய நாடான மியான்மரில் ஆளுமை மிக்க நபராக வலம் வந்த ஆங் சான் சூகி (78), பல்வேறு வகையான குற்றச்சாட்டுக்கு ஆளானார்.
இதன் காரணமாக அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாகோ பகுதியில் உள்ள Taungoo-யின் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். ஆனால், சிறையில் உள்ள ஆங் சான் சூகியின் (Aung San Suu Kyi) உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்பட்டது.
இங்கிலாந்தில் வசிக்கும் சூகியின் மகன் அலெக்சாண்டர் அரிஸ், தனது தாய் மற்றும் பிற அரசியல் கைதிகளையும் விடுவிக்க மியான்மர் ராணுவ அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில் வெப்ப அலை காரணமாக, ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ராணுவ அரசு தெரிவித்துள்ளது.
சுகாதார நடவடிக்கையாக சூகி இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் சூகி எங்கு இருக்கிறார் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
முன்னதாக, ஜனநாயக ஆதரவு எதிர்ப்புப் போராளிகள் மற்றும் இன சிறுபான்மை கொரில்லாப் படைகளில், அவர்களது கூட்டாளிகளுக்கு எதிரான போராட்டத்தில் இராணுவம் பெரும் தோல்வி அடைந்தது.
இதற்கிடையில், பாரம்பரிய புத்தாண்டு விடுமுறையைக் குறிக்கும் வகையில் 3,000க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |