சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் - காரணம் இதுதான்
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேக்ஸ்வெல்
2012 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் கிளென் மேக்ஸ்வெல், இதுவரை 149 போட்டிகளில் விளையாடி, 4 சதம், 23 அரை சதம் உட்பட 3,990 ஓட்டங்களை குவித்து, 77 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
மேலும், 2015 மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பைகளை அவுஸ்திரேலியா அணி வெல்ல மேக்ஸ்வெல் முக்கிய பங்கு வகித்தார்.
2023 ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 201 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அவுஸ்திரேலியா அணிக்காக இரட்டை சதம் ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2025 ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணியில் இடம் பிடித்திருந்த மேக்ஸ்வெல் 7 போட்டிகளில் 48 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். அதன் பிறகு, விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து வெளியேறினார்.
ஓய்வுக்கான காரணம்
இந்நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கிளென் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள T20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காகவே இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய அவர், "ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபியின் போது இதை உணர்ந்து, தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லியிடம் இது குறித்து தெரிவித்தேன்.
2026 உலகக்கோப்பை வரை விளையாடுவேன் என நினைக்கவில்லை. எனது இடத்தில் வேறு வீரர்களை ஆட வைத்து, அந்த இடத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ள திட்டமிட வேண்டிய நேரம் இது' என அவரிடம் கூறினேன். அந்தப் பங்கைத் தக்க வைத்துக் கொள்ள அவர்களுக்கு போதுமான வழி கிடைக்கும் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |