கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா

Sydney
By Arbin Dec 16, 2025 05:30 AM GMT
Report

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துக்கம் அனுசரிக்கத் தொடங்கிய நிலையில், அவுஸ்திரேலியா அரசாங்கம் துப்பாக்கிச் சட்டங்களைக் கடுமையாக்க வாக்களித்துள்ளது.

துப்பாக்கிச் சட்டங்களில் மாற்றம்

சிட்னியின் புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் நடந்த யூத கொண்டாட்டத்தில் 15 பேரைக் கொன்றதாக தந்தை மற்றும் மகன் மீது பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா | Australia Plans Tougher Gun Laws

இச்சம்பவத்தில், 50 வயதான தந்தை சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதை அடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் அவரது 24 வயது மகன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்டவர்களின் பெயர்களை பொலிசார் வெளியிடவில்லை, ஆனால் தேசிய ஒளிபரப்பாளரான ஏபிசி மற்றும் பிற ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், அவர்களை சஜித் அக்ரம் மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் என அடையாளம் கண்டுள்ளன.

போண்டி துப்பாக்கிச் சூடு... உலகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்ட Hanukkah பாதுகாப்பு

போண்டி துப்பாக்கிச் சூடு... உலகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்ட Hanukkah பாதுகாப்பு

மட்டுமின்றி, துப்பாக்கிதாரியின் வாகனத்தில் ஐ.எஸ் அமைப்பின் இரண்டு கொடிகள் கண்டெடுக்கப்பட்டதாக, எந்த ஆதாரத்தையும் மேற்கோள் காட்டாமல் ஏபிசி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, உலகின் மிகக் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களில் ஒன்றான அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சட்டங்களில் மாற்றம் தேவையா என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.

கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா | Australia Plans Tougher Gun Laws

மேலும் தாக்குதலில் ஈடுபட்ட சஜித் அக்ரம் என்பவர் 2015 முதல் துப்பாக்கி உரிமத்தையும், பதிவு செய்யப்பட்ட ஆறு ஆயுதங்களையும் வைத்திருந்ததாக பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 10 முதல் 20 நிமிடங்கள் வரை, ஹனுக்கா நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மீது தந்தையும் மகனும் கூட்டாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் என பீதியடைந்த மக்கள் சிதறி ஓடினர்.

பரிசீலிக்கப்படும் நடவடிக்கைகள்

துப்பாக்கி குண்டுக்கு பலியானவர்களில் 10 முதல் 87 வயதுடையவர்கள் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். மேலும், இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட 40 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா | Australia Plans Tougher Gun Laws

இந்த நிலையில், துப்பாக்கி உரிமங்களால் அனுமதிக்கப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கை, பிந்தையது எவ்வளவு காலம் செல்லுபடியாகும் போன்ற அம்சங்களைச் சமாளிக்க, துப்பாக்கிச் சட்டங்களை வலுப்படுத்தவும், தேசிய துப்பாக்கிப் பதிவேட்டை உருவாக்கவும் தனது அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக பிரதமர் அல்பானீஸ் கூறியுள்ளார்.

மட்டுமின்றி, திறந்தநிலை உரிமங்கள் மீதான கட்டுப்பாடுகள் முதல் ஒரு தனி நபர் வைத்திருக்கும் ஆயுதங்கள் மீதான வரம்புகள் மற்றும் சட்டப்பூர்வமான வகைகள், மாற்றங்கள் உட்பட, அவுஸ்திரேலிய குடிமக்களுக்கு மட்டுமே அனுமதிகள் வரை பரிசீலிக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அல்பானீஸ் விளக்கமளித்துள்ளார்.

கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா | Australia Plans Tougher Gun Laws

இதனிடையே, உள்விவகார அமைச்சர் டோனி பர்க் கூறுகையில், அந்த தந்தை 1998 ஆம் ஆண்டு மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு வந்தார் என்றும், அவரது மகன் அவுஸ்திரேலியாவில் பிறந்த குடிமகன் என்றும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US