இந்த 4 நாட்டவர்களும் இனி அவுஸ்திரேலிய ராணுவத்தில் இணையலாம்: விதிகள் அறிவிப்பு
பிரித்தானியர்கள் உட்பட 4 நாட்டவர்களை தங்கள் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள அவுஸ்திரேலிய ராணுவம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிரந்தர வதிவிட உரிமம் பெற்ற
புதிதாக ராணுவத்தில் ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் அவுஸ்திரேலியா கடும் பின்னடைவை எதிர்கொண்டுவரும் நிலையில், தற்போது வெளிநாட்டவர்களையும் தங்கள் ராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் முடிவுக்கு அந்த நாடு வந்துள்ளது.
அண்டை நாடுகளால் அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் இருப்பதாலையே அவிஸ்திரேலியா இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமம் பெற்ற நியூசிலாந்து நாட்டவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் விண்ணப்பிக்க அனுமதி அளித்துள்ளனர்.
அத்துடன், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் கனேடியர்களுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள தகுதி வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றே பாதுகாப்பு அமைச்சர் Richard Marles தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துடன் ஏற்கனவே புரிதல் இருப்பதாக குறிப்பிடும் அமைச்சர் Richard Marles, முதலாம் உலகப் போரில் கல்லிபோலியில் இரு நாட்டவர்களும் ஒன்றாக சண்டையிட்ட வரலாற்றை சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டுமின்றி, சமீப ஆண்டுகளாக பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுடன் நெருக்கமான தொடர்பை அவுஸ்திரேலியா உருவாக்கியுள்ளது. மட்டுமின்றி, சீனாவின் சமீபத்திய நடவடிக்கைகளால் அவுஸ்திரேலியா கடுமையாக போராடும் நிலைக்கும் தள்ளப்பட்டது.
வேலையின்மை விகிதம்
இந்த நிலையில் தான் 2020ல் சுமார் 19.8 பில்லியன் பவுண்டுகள் தொகையை ஒதுக்கிய அவுஸ்திரேலியா இரண்டு தசாப்தங்களுக்குள் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 30 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.
ஆனால் அவுஸ்திரேலியா போன்ற வேலையின்மை விகிதம் மிக மிக குறைவான ஒரு நாட்டில், ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பது என்பது கடினமான ஒன்று என அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய தரவுகளின் அடிப்படையில் அவுஸ்திரேலிய ராணுவத்தில் 5,000 வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. புதிதாக ராணுவத்தில் சேர விரும்புபவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
அத்துடன் முந்தைய இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டு ராணுவத்தில் பணியாற்றியிருக்கக் கூடாது. மேலும், அவுஸ்திரேலிய குடியுரிமை பெற தகுதியுடையவர்களாகாவும் இருத்தல் வேண்டும். ராணுவத்தில் இணைந்த 90 நாட்களுக்கு பின்னர் குடியுரிமை வழங்கப்படும் என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |