இன்று முதல் அவுஸ்திரேலியர்களுக்கு இந்த வசதி கிடையாது! பேஸ்புக் அதிரடி நடவடிக்கை
அவுஸ்திரேலிய பயனர்கள் இன்று முதல் பேஸ்புக்கில் செய்திகளை படிக்கவும் பகிரவும் தடை செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் இனி அவுஸ்திரேலிய செய்தி நிறுவனங்களின் செய்திகளை பயன்படுத்த அந்நிறுவனங்களுக்கு பணம் செலுத்தவேண்டும் என்று அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம் முன்மொழியப்பட்டது.
இதன் காரணமாக பேஸ்புக்கில் எந்த ஒரு செய்திகளை படிக்கவும், பகிரவும் அவுஸ்திரேலிய பயனர்களுக்கு இன்று முதல் (பிப்ரவரி 18) தடை செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பத்திரிகையாளர்கள் பேஸ்புக்கில் செய்தி உள்ளடக்கத்தை தொடர்ந்து வெளியிடலாம், ஆனால் அதன் linkகள் மற்றும் பதிவுகளை அவுஸ்திரேலிய பயணங்களால் பார்க்கவோ பகிரவோ முடியாது என்று பேஸ்புக் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய பயனர்கள் அவுஸ்திரேலிய அல்லது சர்வதேச செய்திகளைப் பகிர முடியாது.
அதேபோல், அவுஸ்திரேலியாவுக்கு வெளியே உள்ள சர்வதேச பயனர்களும் அவுஸ்திரேலிய செய்திகளைப் பகிர முடியாது.
ஒவ்வொரு மாதமும் 17 மில்லியன் பயனர்கள் பேஸ்புக்கை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. The ABC, The Sydney Morning Herald, The Australian போன்ற முன்னணி செய்தி நிறுவனங்கள் மில்லியன் கணக்கான பின்தொடர்பாளர்களை பேஸ்புக்கில் கொண்டுள்ளன. இந்நிலையில், அவுஸ்திரேலிய பயனர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
பேஸ்புக்கின் இந்த நடவடிக்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.
 
                                            
                                                                                         
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        