தடுப்பூசி போடுபவர்களுக்கு லொட்டரி பரிசு! பிரபல ஐரோப்பிய நாடு அறிவிப்பு
பிரபல ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா, கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு லொட்டரி டிக்கெட் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ஆஸ்திரியா அதிபர் Karl Nehammer இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் Karl Nehammer கூறியதாவது, தடுப்பூசி போடுபவர்களுக்கு நிதி வெகுமதி அளிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
கடந்த காலத்திலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டதன் மூலம், அத்தகைய அமைப்பை அமைப்பதற்கு தடுப்பூசி லொட்டரி சிறந்த வழி என்பதை கண்டறிந்துள்ளோம்.
பொதுமக்கள், ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் போட்ட ஒவ்வொரு டோஸுக்கு ஒவ்வொரு ஒரு லொட்டரி டிக்கெட் கிடைக்கும்.
பூஸ்டர் போட்டவர்களுக்கு மொத்தம் மூன்று டிக்கெட்டுகள் கிடைக்கும்.
பத்தாவது பரிசு பெரும் ஒவ்வொரு லொட்டரி டிக்கெட்டுக்கு 500 யூரோ பரிவு வவுச்சர் வழங்கப்படும் என கூறிய அதிபர் Karl Nehammer, வவுச்சர்கள் எதற்காக என்று குறிப்பிடவில்லை.