இறந்துபோன தாயின் உடலை பாதாள அறையில் பதப்படுத்திய மகன்! எதெற்காக தெரியுமா? வெளிநாட்டில் நடந்த அதிரவைக்கும் சம்பவம்
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், ஒருவர் தனது இறந்த தாயாரின் ஓய்வூதியத்தைப் பெற, அவரின் உடலை வீட்டின் அடித்தளத்தில் உள்ள ஓர் அறையில் ஒரு வருடத்திற்கும் மேல் பதப்படுத்தி வைத்திருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
89 வயதான அந்த தாயார், இறப்பதற்கு முன் dementia எனும் ஞாபக மறதியால் அவதிப்பட்டதாக நம்பப்படுகிறது. அவர் 2020 ஜூன் மாதம் இயற்கையாக மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
66 வயதாகும் அவரது மகன் குளிர்பதனப் பைகளைப் பயன்படுத்தி, அவரது சடலத்திலிருந்து துர்நாற்றம் வெளியாகாமல் தவிர்த்து, கடந்த ஒரு வருடமாக வீட்டின் அடித்தளத்தில் உள்ள ஓர் அறையில் மறைத்து வைத்துள்ளார்.
இதுவரை, தாயாரின் ஓய்வூதியத்திலிருந்து அவர் சுமார் 50,000 யூரோக்களைச் சட்டவிரோதமாகப் பெற்றதாகக் காவல்துறையினர் நம்புகின்றனர்.
அப்பகுதிக்கு வந்த புதிய அஞ்சல்காரர் ஒருவர், தாயாரை பார்த்துவிட்டு பிறகு ஓய்வூதியத்தைத் தருவதாக கூறியுள்ளார். ஆனால், அவரை பார்க்கும் முடியாது என மறுத்த போது, மகன் எதோ மோசடி செய்வதாக சந்தேகம் உண்டானது.
அதனையடுத்து, அவர் மீது விசாரணை நடத்தப்பட்டபோது உண்மை வெட்டவெளிச்சமானது.
அவர் தாயின் உடலைப் பதப்படுத்தி ஒரு வித மம்மி (mummy) போலச் செய்ததாக விசாரணையின் மூலம் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இறுதியில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து பொலிஸார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள மகன் வேறு வருமானம் இல்லாத காரணத்தினாலும், தனது தாயுடன் பகிர்ந்து வந்த அந்த வீட்டை தக்கவைத்துக்கொள்ளவும் இவ்வாறு செய்துள்ளதாக கூறினர்.
மேலும், உடலை பதப்படுத்த போதுமான பேண்டேஜ்கள் மற்றும் ஐஸ் கட்டிகள் கிடைக்காத நிலையில், பூனையின் கழிவுகளைப் பயன்படுத்தி பதப்படுத்தியதாகவும் கூறினர்.