குழந்தைகள் உணவில் எலி விஷம் கலந்த நபர்: ஆஸ்திரிய HiPP நிறுவனம் அதிர்ச்சி
குழந்தை உணவில் எலி விஷம் கலந்த விவகாரத்தில் 39 வயது நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தை உணவில் விஷம்
கடந்த ஏப்ரல் 18ம் திகதி EIsenstadt நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் வாங்கப்பட்ட HiPP பிராண்ட் என்ற குழந்தைகள் உணவு பொருளில் எலி விஷம் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக விஷம் கலக்கப்பட்ட 5 பாட்டில் உணவையும் யாரும் உட்கொள்வதற்கு முன்னதாக அதிகாரிகள் கைப்பற்றினர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், HiPP நிறுவனம் தங்களை யாரோ மிரட்டி பணம் பறிப்பதற்காக இத்தகைய செயலில் ஈடுபட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக மிரட்டல் மின்னஞ்சல் ஒன்றை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆஸ்திரியாவில் உள்ள SPAR, EUROSPAR, INTERSPAR மற்றும் Maximarkt என அனைத்து பல்பொருள் அங்காடியில் இருந்தும் HiPP நிறுவனத்தின் குழந்தைகள் உணவு பொருட்கள் நீக்கப்பட்டன.
சந்தேக நபர் கைது
இந்நிலையில், குழந்தைகள் உணவில் எலி விஷம் கலந்து பணம் பறிக்க முயன்ற அஸ்திரியாவை சேர்ந்த 39 வயது நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் மாகாணத்தில் பிடிபட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சனிக்கிழமை சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து HiPP நிறுவனம் நிம்மதி அடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |