வீடுகளில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த கரடிகளை மீட்ட அதிகாரிகள்... விடுவித்தபோது எதிர்பாராமல் நடந்த திகில் சம்பவம்
ஈராக்கில் வீடுகளில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த கரடிகளை மீட்ட அதிகாரிகள், அவற்றை மீண்டும் வனப்பகுதியில் விட முடிவு செய்தனர்.
அதை ஒரு நிகழ்ச்சியாக நடத்த முடிவு செய்த அதிகாரிகள், ஊடகவியலாளர்களையும் அழைத்திருக்கிறார்கள்.
அனைவரும் ஆவலுடன் காத்திருக்க, ஆறு கரடிகள் திறந்துவிடப்பட்டன. ஆனால், காட்டுக்குள் ஓடும் என எதிர்பார்க்கப்பட்ட கரடிகள், எதிர்பாராதவிதமாக மக்களை நோக்கி பாய்ந்தன.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், பயத்தில் உயிரைப் பிடித்துக்கொண்டு எல்லோரும் ஆளுக்கொரு பக்கம் ஓடும் காட்சியைக் காண முடிகிறது.
பின்னர் ஒரு வழியாக சிலர் அந்த கரடிகளை காட்டுக்குள் துரத்த, மற்றவர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டபடி வீடு திரும்பியுள்ளனர்.