டோனியை கிளீன் போல்ட் செய்தது எப்படி? அந்த ஐடியாவை உபயோகித்தேன்... ரகசியம் உடைத்த இளம்வீரர்
ஐபிஎல் போட்டியில் டோனியை அவுட்டாக்கியது தொடர்பான ரகசியத்தை இளம்வீரர் உடைத்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக பாதியில் ரத்தானது. இதனைத் தொடர்ந்து, ஜூன் மாதம் 18 ஆம் திகதி, நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.
இந்த ஐபிஎல் சீசனில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடிய அவேஷ் கானும் கூடுதல் வீரர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த தொடரில், இதுவரை 8 போட்டிகள் ஆடியுள்ள அவேஷ் கான், 14 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக, டோனி மற்றும் கோஹ்லி ஆகியோரை போல்டு ஆக்கி, பட்டையைக் கிளப்பியிருந்தார். அதாவது சென்னைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி அவேஷ் கான் டோனி சந்தித்த இரண்டாவது பந்திலேயே, அவரை போல்டு ஆக்கினார்.
இது குறித்து பேசிய அவேஷ் கான், டோனி பேட்டிங் செய்ய வந்த போது, குறைந்த ஓவர்களே இருந்ததால், அடித்து தான் ஆடுவார் என்பது பண்ட்டிற்கு தெரியும்.
ஆனால், டோனி நான்கு மாதங்கள் கழித்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடுகிறார் என்பதால், அடித்து ஆடுவது என்பது அவருக்கு சவாலாக அமையும் என்றும் பண்ட் அறிந்து வைத்திருந்தார்.
எனவே, என்னிடம் ஷார்ட் லெங்த்தில் பந்துகளை வீச பண்ட் கூறினார். நான் அதனை மட்டும் தான் செய்தேன். அந்த பந்தை அடித்து ஆட டோனி முயற்சி செய்ய, இன்சைடு எட்ஜ் மூலம் அவுட்டாக மாறியது என கூறியுள்ளார்.