அமெரிக்காவில் 7 இந்திய பெண்களுக்கு விருது வழங்கி பாராட்டு! எதற்கு தெரியுமா?
அமெரிக்காவில் மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்தியாவைச் சேர்ந்த ஏழு பெண்களுக்கு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அமெரிக்காவில், நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிகட் மாகாண இந்தியர்கள் கூட்டமைப்பு, சர்வதேச பெண்கள் தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது
அதில், நியூயார்க்கில் உள்ள, இந்திய துணை துாதர், ரந்திர் ஜெய்சால் பங்கேற்று, பல்வேறு துறைகளைச் சேர்ந்த, சாதனை பெண்கள் ஏழு பேருக்கு, நினைவு கேடயம், விருது, பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
அந்த வகையில், வதேதராவைச் சேர்ந்த, நவரசனா கல்விக் கழக தலைவரும், துாய்மை இந்தியா திட்டத்தின் துாதருமான, தேஜல் அமின், ஹார்ட்போர்டு ஹெல்த்கேர் மருத்துவமனையில், மருத்துவராக உள்ள, உமா ராணி மதுசூதனா, ஆகியோர் கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டப்பட்டன
செவிலியர், ராஷ்மி அகர்வால், பல் மருத்துவர், அபா ஜெய்ஸ்வால், சட்ட ஆலோசகர், சபீனா தில்லான், நடிகையும், தயாரிப்பாளருமான, ராஷனா ஷா ஆகியோருக்கும், விருது வழங்கப்பட்டது.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோருக்கு, உணவு உள்ளிட்ட உதவிகளையும், இலவச முக கவசங்களையும் வழங்கிய, மாஸ்க் ஸ்குவாட் என்ற, மகளிர் அமைப்பை பாராட்டி, கேடயம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
