ஆக்சியம்-4: சுபான்ஷூ சுக்லா - இந்தியாவின் 2வது விண்வெளி வீரராகும் பயணம் ஒத்திவைப்பு!
மோசமான வானிலை காரணமாக ஆக்சியம்-4 மனித விண்வெளிப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட விண்வெளி பயணம்
நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தால் திட்டமிடப்பட்டிருந்த ஆக்சியம்-4 மனித விண்வெளிப் பயணம்(Axiom-4 Space Mission), மோசமான வானிலை காரணமாக நாளை (ஜூன் 11 ஆம் திகதி) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
🇮🇳🇺🇸 ISRO-NASA Mission (Axiom-4) to the #ISS will be launched tomorrow on June 10 at 5:52 PM IST. pic.twitter.com/tc8ztfgC3B
— News IADN (@NewsIADN) June 9, 2025
இந்த நான்காவது தனியார் மனித விண்வெளிப் பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி என மொத்தம் நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்ல உள்ளனர்.
இரண்டாவது இந்தியர்
குறிப்பிடத்தக்க வகையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுபான்ஷூ சுக்லா, 1984 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்வெளிப் பயணத்தில் இணைந்த ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெறவுள்ளார்.
நாசா மற்றும் இஸ்ரோவின் கூட்டு முயற்சியான இந்த ஆக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |