இந்திரா காந்தி படுகொலை உட்பட பாபா வங்காவின் இதுவரை நிறைவேறிய கணிப்புகள்... முழுமையான பட்டியல்
பிறக்கவிருக்கும் புத்தாண்டில் நடக்கும் மாற்றங்கள் குறித்து பாபா வங்காவின் கணிப்பு வெளியாகி கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், இதுவரை நிறைவேறிய கணிப்புகளின் தொகுப்பு வெளியாகியுள்ளது.
மொத்த உலகமும் கண் கலங்கும்
1996ல் மரணமடைந்துள்ள பாபா வங்கா, செர்னோபில் பேரழிவு மற்றும் இளவரசி டயானாவின் மரணம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை கணித்திருந்தார்.
Credit: Pixabay
ரஷ்ய நகரம் மொத்தமாக பெருந்துயரத்தில் மூழ்கும் என 1980ல் பாபா வங்கா கணித்திருந்தார். அந்த நிகழ்வால் மொத்த உலகமும் கண் கலங்கும் என்றார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர், 2000 ஆகஸ்டு மாதத்தில் Kursk என்ற ரஷ்ய நீர்மூழ்கிக்கப்பல் கடலுக்குள் மூழ்கி விபத்தில் சிக்கியதுடன், அதில் பயணித்த 118 பேர்களும் பலியாகினர்.
இந்தியாவில் பிரபலமான ஒரு பெண் படுகொலை செய்யப்படுவார் என 1969ல் பாபா வங்கா கணித்திருந்தார். புகை மற்றும் நெருப்பில் ஒரு ஆரஞ்சு-மஞ்சள் ஆடையைப் பார்க்கிறேன் என பாபா வங்கா குறிப்பிட்டிருந்தார்.
அவர் கணித்த 20 ஆண்டுகளில், காவி உடையில் இருந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தி பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதேப் போன்று, அமெரிக்க மக்கள் மீது ஒரு தாக்குதல் முன்னெடுக்கப்பட இருக்கிறது, அது எஃகு பறவைகள் மூலம் நடக்கும் என்றார்.
மேலும், ஓநாய்கள் புதரின் மறைவில் ஊளையிடும், அப்பாவி மக்களின் இரத்தம் வழிந்தோடும் என்றார். அது அமெரிக்க இரட்டை கோபுரம் மீதான பயங்கரவாத தாக்குதலை பாபா வங்கா குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி ஒரு கருப்பினத்தவர்
2009ல் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா தெரிவாகும் பல காலம் முன்னரே, அமெரிக்காவின் 44வது ஜனாதிபதி ஒரு கருப்பினத்தவர் என பாபா வங்கா கணித்துள்ளார். மட்டுமின்றி, தமது மரணத்தை பாபா வங்கா கணித்துள்ளார். 1996 ஆகஸ்டு 11ல் பாபா வங்கா கணித்தது போலவே அவர் மரணமடைந்துள்ளார்.
@getty
2022ல் பெரும் நகரங்கள் பல வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என கணித்துள்ளார். 1935க்கு பின்னர் மிக மோசமான தண்ணீர் பற்றாக்குறையை 2022ல் பிரித்தானியா எதிர்கொண்டது.
அவுஸ்திரேலியாவும் ஆசிய நாடுகள் பலவும் பெருவெள்ளத்தால் அவதிப்படும் என கணித்திருந்தார். 2022ல் ஜூலை மாதம், 8 மாதங்கள் பெய்ய வேண்டிய மழை சிட்னியில் 4 நாட்களில் பெய்துள்ளது.
ஜப்பானில், பெரும் வெப்பமண்டல புயலால் மக்கள் போராடினர், இது பெருவெள்ளம் ஏற்பட காரணமாக அமைந்தது. 2024ல் ரஷ்ய ஜனாதிபதி மீது கொலை முயற்சி முன்னெடுக்கப்படும் எனவும், உயிரியல் ஆயுதங்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும்,
பல்வேறு நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். மேலும் உலகின் பல நாடுகள் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் என்றும், காலநிலை மாற்றங்கள் அச்சுறுத்தும் என்றும்,
இணையமூடாக தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் என்றும், மிக ஆபத்தான நோய் ஒன்று புதிய சிகிச்சையால் குணமடையும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |