பேரழிவு காத்திருக்கிறது... நடப்பு ஆண்டு குறித்து பாபா வங்காவின் திகிலூட்டும் ஆருடம்
உலகளாவிய அரசியல் பதட்டங்கள் அச்சுறுத்திவரும் நிலையில் பாபா வங்காவின் 2023 அணுசக்தி பேரழிவு கணிப்பு திகிலூட்டும் வகையில் அமைந்துள்ளது.
அணுசக்தி பேரழிவு ஓன்று
2023ல் உலக நாடுகள் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து பாபா வங்கா அப்பட்டமான கணிப்பு ஒன்றை பதிவு செய்துள்ளார் என கூறுகின்றனர். 1996ல் பாபா வங்கா மரணமடைந்திருந்தாலும் அவரது கணிப்புகள் பல தற்போதும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
@getty
அந்தவகையில் இந்த ஆண்டு பற்றிய திகிலூட்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறுகின்றனர். மிக மோசமான தகவலாக, இந்த ஆண்டு அணுசக்தி பேரழிவு ஓன்று நடக்க வாய்ப்பிருப்பதாக அவர் கணித்துள்ளார்.
அதாவது ஆசியா முழுவதும் நச்சு காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் அணுமின் நிலையப் பேரழிவு ஓன்று ஆபத்தான நோய் பரவுவதற்கு வழிவகுக்கும் என வங்கா கணித்துள்ளார்..
மேலும் இந்த ஆண்டில் ஒரு வல்லரசு நாடு உயிரியல் ஆயுதத்தை பயன்படுத்தும் எனவும் அது பல நூறாயிரம் மக்களின் மரணத்திற்கு வழிவகுக்கும் எனவும் அவர் கணித்துள்ளார்.
Image: Wikipedia
கணிப்பு நிஜமாகலாம் என அச்சம்
தற்போதைய ரஷ்ய - உக்ரைன் போர் உச்சமடைந்திருக்கும் நிலையில், அதில் வல்லரசு நாடுகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டிருக்கும் சூழலில் அவரது கணிப்பு நிஜமாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அணை சேதப்படுத்துதல் அம்மோனியா குழாய்களை தகர்ப்பது என ரஷ்யா பேரழிவுக்கு காரணமாகி வருகிறது. இன்னொரு பக்கம் சீனா மற்றும் தைவான் நாடுகளின் மோதல் போக்கு.
@getty
மேற்கத்திய நாடுகளின் போர்க்கப்பல்கள் ஆசிய வல்லரசின் முகத்தில் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதும் பதட்டமான சூழலையே உருவாக்கியுள்ளது.