உயிரி ஆயுதங்கள், அணு உலை வெடிப்பு... 2023ஆம் ஆண்டு குறித்து பாபா வங்கா கணித்துள்ள சில்லிடவைக்கும் கணிப்புகள்
பன்னிரண்டு வயதாக இருக்கும்போது பெரும் புயல் ஒன்றில் சிக்கி, மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய பாபாவை, பல நாட்களுக்குப்பின் கண்களில் மண் மூடிய நிலையில் கண்டுபிடித்தனர் அவரது குடும்பத்தினர்.
அதன் பிறகு தனது கண் பார்வையை இழந்த பின்னரே, தனது முதல் கணிப்பை கணித்த பாபா, தான் காணாமல் போனபோது, தனக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் மற்றும் மற்றவர்களை குணமாக்கும் சக்தி கிடைத்ததாக தெரிவித்திருந்தார்.
பலித்த பாபா வங்காவின் கணிப்புகள்
1996இல் இறந்தாலும், இரட்டைக் கோபுர தாக்குதல், சுனாமி, ரஷ்ய அதிபர் புடின் மீதான தாக்குதல், அமெரிக்க அதிபரின் கேட்கும் திறன் இழப்பு உட்பட ஏராளமான விடயங்களை கணித்து அவர் கூறிய விடயங்களில் பல பலிக்கத் துவங்கியதால் உலகின் கவனம் ஈர்த்தார் பாபா.
பாபாவின் 2023க்கான சில்லிடவைக்கும் கணிப்புகள்
தற்போது 2023ஆம் ஆண்டு குறித்து பாபா கணித்துள்ள விடயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூமியின் வட்டப்பாதையில் மாற்றம், அணு உலை வெடிப்புகள் போன்ற சில விடயங்களை கணித்துள்ள பாபா, சில அறிவியல் பூர்வ கண்டுபிடிப்புகள் நிகழும் என்றும் கூறியுள்ளார்.
அவற்றில் ஒன்று, ஆய்வகங்களில் குழந்தைகள் உருவாக்கப்படுதல் குறித்ததாகும். அதாவது, எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளின் தோலின் நிறம் முதலான சில குணாதிசயங்களை பெற்றோரின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்யமுடியுமாம்.
(Image: Getty Images/iStockphoto)
மறுபக்கத்தில், பாபா கணித்துள்ள விடயங்களில் மோசமானவை, 2023இல் அணு உலை வெடிப்பு ஒன்று நிகழும் என்பதாகும்.
மேலும், பூமிக்கு ஏலியன்கள் வருகை தரும் என்றும், அதனால் பல மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள் என்றும், உலகம் முழுவதும் இருளில் மூழ்கும் என்றும் கூறியுள்ளார் பாபா.
அவர் உலகம் முழுவதும் இருளில் மூழ்கலாம் என குறிப்பிட்டுள்ளது, அவர் கணித்த சூரியப் புயலால் கூட உருவாகலாம் என கருதப்படுகிறது.
இதுபோக, சூரியனில் இருந்து வெடித்து வெளியாகும் மின் தாக்குதலால் பூமி பாதிப்புக்குள்ளாகும் என்று கணித்துள்ளார் பாபா.
கடைசியாக, ஒரு பெரிய நாடு உயிரி ஆயுதங்களையும் மனிதர்கள் மீது பயன்படுத்தி சோதனை செய்யும் என்றும், அதனால், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கக்கூடும் என்றும் கணித்துள்ளார் பாபா.